"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்


கைநாட்டுச் சான்றிதழ் – 1948 

 

1948 அடையாள அட்டை பரவலாகப் புழக்கத்தில் இல்லாத காலம். மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் தங்களை வாய்மொழியினூடாக அடையாளங் காட்டிக்கொண்ட காலம். தன்னைப் பற்றி அறிந்த விவரங்களை ஒரு தாளில் எழுதி, கையொப்பம் அல்லது கைநாட்டு வைத்துக் கொடுத்தார்கள். அரசு தொடர்புடைய பணிகளுக்கும், தோட்ட நிருவாகம் தொடர்பான பணிகளுக்கும் இத்தகைய கையெழுத்துச் சான்றிதழ்களே கையாளப்பட்டன. இவ்வாறு கொடுக்கப்பட்ட கைநாட்டுச் சான்றிதழ்கள் அதிகாரம் பெற்ற பத்திரங்களாகக் கருதப்பட்டன. முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வகை சான்றிதழ்கள் கையாளப்பட்டன.

முனிசாமி த/பெ காளிமுத்து என்பவர், தொடர்வண்டி இலாகாவில் பணியாற்றிட விண்ணப்பித்துள்ளார். அதற்கு அவரைப் பற்றிய முழு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அவர் தன்னைப் பற்றிய விவரங்களை தனித்தாள் ஒன்றில் எழுதிக் கொடுத்துள்ளார். தன்னைப் பற்றிய அடையாள அட்டையாக இது செயல்பட்டுள்ளது. இச்சான்றிதழ் 17.1.1948-இல் எழுதப்பட்டுள்ளது. இச்சான்றிதழ், வாசகர்கள் பார்வைக்காக இங்குத் தரப்பட்டுள்ளது.

 

பெயர் : முனிசாமி

வயது : 26

தகப்பனார் பெயர் : காளிமுத்து
 

தாயார் பெயர்  :  செல்லம்மாள்
 

முகவரி :

கிள்ளான், புக்கிட் ரசா, 5 மையில்.
 

வேலை செய்யும் இடம்:

கிள்ளான் சங்குஜன்,
7-ம் நெம்பர் காங்கி,
ரயில் வே கம்பி.

 

இந்தியா முகவரி :

கப்பாகுளம்
தஞ்சாவூர் ஜில்லா
குன்னலூர் போஸ்ட்டு.

 

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com